ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் – நடிகர் சூர்யா ட்வீட்!

 

ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் – நடிகர் சூர்யா ட்வீட்!

நீட் தேர்வு குறித்து சூர்யாவின் கருத்து விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்றைய விவாத பொருளாக மாறியுள்ளது நீட் தேர்வு. பலத்த எதிர்ப்புகள், எதிர்ப்பார்ப்புகள், சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடந்து முடிந்தது. ஆனால் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது நம்மால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நீட் தேர்வு சர்ச்சை குறித்து ஆளும் அதிமுக, ஆண்ட திமுக கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டி வருகின்றன.

ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் – நடிகர் சூர்யா ட்வீட்!

இதுஒருபுறமிருக்க நடிகர் சூர்யா சொன்ன கருத்து கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளை திட்டி தீர்த்துள்ள சூர்யா நீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. சூர்யாவின் கருத்து தற்போது ஒருசேர ஆதரவையும், எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகர் சூர்யா மீண்டும் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்த பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே கைவிடுகிறார்கள். நாம நெனச்சா அதை மாத்திடலாம் என்று கூறியுள்ளார். மேலும் அகரம் அறக்கட்டளைக்கு கல்வி ஊக்கத்தொகைக்காக இதுவரை 3030 பேர் விண்ணப்பித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.