கோவை அருகே ஆண் சிறுத்தை மர்ம மரணம் – வனத்துறையினர் விசாரணை!

 

கோவை அருகே ஆண் சிறுத்தை மர்ம மரணம் – வனத்துறையினர் விசாரணை!

கோவை

கோவை அருகே ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட போட்டுக்கடவு வனப்பகுதியில் இன்று காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை அருகே ஆண் சிறுத்தை மர்ம மரணம் – வனத்துறையினர் விசாரணை!

அப்போது பசுங்கனி மேடு என்ற இடத்தின் அருகே சென்றபோது, ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது. இதனை அடுத்து, சிறுத்தையின் சடலத்தை மீட்ட வனத்துறையினர், அதனை பிரேத பரிசோதனைக்காக வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரதே பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே, ஆண் சிறுத்தை வன விலங்குகளுடனான மோதலில் உயிரிழந்ததா?, அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.