கடும் போட்டிகளுக்கிடையே தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்!

 

கடும் போட்டிகளுக்கிடையே தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்!

கடும் போட்டிக்கு மத்தியில் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜான்சி ராணியின் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்தார். அவரது பதவி காலம் கடந்தாண்டு உடன் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடந்தது. இந்த பதவிக்காக கடுமையான போட்டியும் நிலவியது. இந்நிலையில், வழக்கறிஞர் சுதா மகளிர் காங்கிரஸ் தலைவியாக சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் காங்கிரஸ் கமிட்டி தலைவியாக வழங்கறிஞர் சுதாவை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அனுமதி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து சுதா அந்த பணியை கவனிப்பார் என தெரிவித்துள்ளார்.