திருவாரூரில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை போலீஸ் விசாரணை
Oct 13, 2020, 11:28 IST1602568739000
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நீடாமங்கலம் நீதிமன்றத்தில்
வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜ்குமாரை மர்மநபர்கள் சிலர் வழிமறித்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில்
படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய அரித்துவாரமங்கலம் போலீசார், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு காலகட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக ராஜ்குமார் கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..