பெரிய தியேட்டர்கள் 2,3 சிறு தியேட்டர்களாக விரைவில் மாற்றப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜு

 

பெரிய தியேட்டர்கள் 2,3 சிறு தியேட்டர்களாக விரைவில் மாற்றப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜு

பெரிய தியேட்டர்களை 2,3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பெரிய தியேட்டர்கள் 2,3 சிறு தியேட்டர்களாக விரைவில் மாற்றப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்த நிலையில் தியேட்டர்களும் திறக்கப்பட்டன. இருப்பினும் புதிய படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது.வி.பி.எஃப் கட்டண விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சுமூக நிலை ஏற்படாத நிலையில் புதிய படங்கள் வெளியீடு தள்ளி போயுள்ளது. இதனால் வரும் ஜனவரி மாதம் முதலே புதிய படங்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முரளி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவரை எதிர்த்து தேர்தலில் நின்ற வேட்பாளர் இயக்குனர் டி.ராஜேந்தர் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக குற்றம் சாட்டியதுடன், புதிய சங்கத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்பட்டு வரும் நிலையில் டிஆர் தலைமையில் புதிய சங்கம் கேலி கூத்தாக மாறியுள்ளது.

பெரிய தியேட்டர்கள் 2,3 சிறு தியேட்டர்களாக விரைவில் மாற்றப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்நிலையில் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பெரிய தியேட்டர்களை 2,3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தயாரிப்பாளர்கள் சங்க செயல்பாடுகளில் அரசு எப்போதும் தலையிட்டது இல்லை என்றார்.