பாஜகவில் நாளை மாற்றுக்கட்சியை சேர்ந்த மிக முக்கிய தலைவர் இணைகிறார்- எல் முருகன்

 

பாஜகவில் நாளை மாற்றுக்கட்சியை சேர்ந்த மிக முக்கிய தலைவர் இணைகிறார்- எல் முருகன்

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 33ஆவது நினைவு நாள் இன்று. இதனையொட்டி, தமிழகத்தின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாஜகவில் நாளை மாற்றுக்கட்சியை சேர்ந்த மிக முக்கிய தலைவர் இணைகிறார்- எல் முருகன்

இதனைதொடர்ந்து பாஜக மாநில தலைவர் எல்.முருகனும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி அவர் படத்திற்கு அஞ்சலி செலுத்தி கொண்டாடுகிறோம். தமிழக விவசாயிகள் மோடி ஆதரவாளர்களாக உள்ளனர். வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக உள்ளது. எஸ்.ரா.சற்குணம் போன்ற மதத்தலைவர்கள் திமுக மேடையில் மோடியை விமர்சித்துள்ளனர். இதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். எஸ்.ரா.சற்குணம் மீது காவல்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழக அரசு ஊழல் இல்லாமல் செயல்படுகிறது என்பது உண்மைதான். நாளை பாஜகவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த மிக முக்கிய தலைவர் இணைகிறார்” எனக் கூறினார்.