பாஜகவில் ஏ டீம், பீ டீம்?- எல் முருகன் விளக்கம்

 

பாஜகவில் ஏ டீம், பீ டீம்?- எல் முருகன் விளக்கம்

தஞ்சை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “மூன்றெழுத்து திமுகவையும் ஊழலையும் பிரிக்க முடியாது, விவசாயிகளை பற்றிய கவலை அவர்களுகு இல்லை. இலங்கை தமிழர்கள் பற்றிய கவலையும் இல்லாமல் தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவி பெற வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள் திமுகவினர். 2016 தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டத்தை தேர்தல் அறிக்கையாக கொடுத்துவிட்டு தற்போது திமுக எதிர்க்கக்கூடிய வேலையில் ஈடுபட்டுள்ளது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அல்ல, படுந்தோல்வி அடையும்.

பாஜகவில் ஏ டீம், பீ டீம்?- எல் முருகன் விளக்கம்

பொங்கல் பண்டிகைக்காக 2500 ரூபாய் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை இந்தக் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது. திமுக- காங்கிரஸ் கூட்டணி தான் உடையும் நிலையில் உள்ளது. மத்தியில் இனிமேல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்து வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சியினர் தேவையில்லாத பேச்சுகளை பேசி வருகிறார்கள். பாஜகவில் ஏ டீம் மற்றும் பீ டீம் கிடையாது” எனக் கூறினார்.