முன்னாள் கங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மருத்துவமனையில் அனுமதி

 

முன்னாள் கங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மருத்துவமனையில் அனுமதி

2020 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே ஏதாவது ஒரு பிரச்னை. கொரோனா, தலைவர்கள் இறப்பு, அடுத்தடுத்து தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதி என நடப்பது அனைத்துமே கெட்ட விஷயங்களாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கே.வி.தங்கபாலு நெஞ்சுவலி காரணமாக சென்னை மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ர் சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் பிறந்த இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும்,தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய அரசில் சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி எனும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையை நடத்தி வருகிறார். கே.வி.தங்கபாலு அவர்கள் சேலத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார்.