சசிகலாவை மீட்கவே தினகரனுக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது – குஷ்பு

 

சசிகலாவை மீட்கவே தினகரனுக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது – குஷ்பு

சசிகலாவை மீட்கவே தினகரனுக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை திநகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்து பேசிய பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது. ஆனால் மீட்டெடுப்போம். அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும். காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்” எனக் கூறினார்.

சசிகலாவை மீட்கவே தினகரனுக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது – குஷ்பு

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “சசிகலாவை மீட்கவே தினகரனுக்கு 4 ஆண்டுகள் ஆச்சி. இதில் எப்போது அதிமுகவை மீட்டெடுக்க போகிறார். பாஜக எங்கு போட்டியிட்டாலும் வெற்றிப்பெறும். வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவித்திருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தது. நல்லது நடக்க போகுது என நினைத்துக்கொண்டு கொஞ்சம் தாங்கிக்கொண்டால் நல்ல இருக்கும். வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். உலகமே கொரோனா வைரஸால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கும் பொருளாதார பாதிப்பு” எனக் கூறினார்.