இதை விட பெட்டர் சாய்ஸ் வேற இல்ல – அண்ணாமலை பற்றி குஷ்பு பேச்சு!

 

இதை விட பெட்டர் சாய்ஸ் வேற இல்ல – அண்ணாமலை பற்றி குஷ்பு பேச்சு!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டது சரியான சாய்ஸ் என பாஜக நிர்வாகி குஷ்பு பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட 43 நபர்களுள், தமிழக பாஜக தலைவரான எல். முருகனும் இடம்பெற்றிருந்தார். அதன் படி, மத்திய இணையமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எல்.முருகனுக்கு கால்நடை, மீன்வளத்துறை உள்ளிட்ட 3 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சரானதால் அந்த பதிவி துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது.

இதை விட பெட்டர் சாய்ஸ் வேற இல்ல – அண்ணாமலை பற்றி குஷ்பு பேச்சு!

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்தார். உடனடியாக அவரை துணைத் தலைவராக்கியது பாஜக தலைமை. தற்போது அவர் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பாஜகவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதனை பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், அண்ணாமலையை தவிர தலைவர் பதவிக்கு சரியான ஆள் யாரும் இல்லை என குஷ்பு தெரிவித்திருக்கிறார். அண்ணாமலை குறித்து பிரபல செய்தி நிறுவனத்திடம் பேசிய குஷ்பு, அவரை விட பெட்டர் சாய்ஸ் இருக்க வாய்ப்பில்லை. ஐபிஎஸ் ஆக பணியாற்றியவர். சட்டங்களை அறிந்தவர். அவரை நியமித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.