பதவி ஆசை எங்களுக்கு இல்லை; இந்த தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் – குஷ்பு

 

பதவி ஆசை எங்களுக்கு இல்லை; இந்த தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் – குஷ்பு

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பு, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் அவர்களை எதிர்கட்சி தலைவர் என்று மரியாதையாக கூறி வருகிறார். ஆனால் ஸ்டாலின் அவர்கள் முதல்வரை எடுபிடி பழனிச்சாமி என்று கூறி வருகிறார். புதிய கல்வி கொள்கை வரும்போது ஸ்டாலின், அதனை எதிர்த்தார். அவர்கள் குடும்பத்தினர் மட்டும் தமிழ் படிக்கிறார்கள்? புதிய கல்வி கொள்கையில் மொழி திணிப்பு கிடையாது. முடிந்தால் கற்று கொள்ளுங்கள்.

பதவி ஆசை எங்களுக்கு இல்லை; இந்த தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் – குஷ்பு

நீங்களும் மக்களுக்கு நல்லது செய்ய மாட்டீர்கள். பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவரும் திட்டத்தையும் எதிர்கிறீர்கள். மக்கள் கண்மூடி தனமாக திமுகவினர்களுக்கு ஓட்டு போடுவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆறுதல் பரிசு போல் காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகளை நியமித்து உள்ளது. அவர்கள் வந்து சீட்டு கேட்ட கூடாது என்பதற்காக தேர்தல் இடங்களை வாரிசுகளுக்கு திமுக கொடுக்கிறது. பாஜகவை பொறுத்தவரை பதவி ஆசை எங்களுக்கு கிடையாது. இந்த தேர்தலில் யார் வர போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல, யார் வர கூடாது என்பது தான் முக்கியம்” எனக் கூறினார்.