“ஸ்டாலின் போட்டியுடும் தொகுதியில் நானும் போட்டியிடுவேன்” சீமானை தொடர்ந்து குஷ்புவும் அதிரடி அறிவிப்பு!

 

“ஸ்டாலின் போட்டியுடும் தொகுதியில் நானும் போட்டியிடுவேன்” சீமானை தொடர்ந்து குஷ்புவும் அதிரடி அறிவிப்பு!

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிட போவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த நிலையில், தற்போது திரைப்பட நடிகை குஷ்பு தன்னை எதிர்த்து போட்டியிட ஸ்டாலின் தயாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “திராவிட இயக்கங்களை தேசியக் கட்சிகள் என்னும் கருங்காலிகள் அழிக்க நினைப்பதாக கே.பி.முனுசாமி கூறியிருந்தார். கருங்காலிகள் யார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? என்பது நான்கு அல்லது ஐந்து நாட்களில் பாஜக அறிவிக்கும். தமிழகத்தில் தலைமை என்னை எங்கு போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன்.

“ஸ்டாலின் போட்டியுடும் தொகுதியில் நானும் போட்டியிடுவேன்” சீமானை தொடர்ந்து குஷ்புவும் அதிரடி அறிவிப்பு!

உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் நிறுத்தினால் என்ன? அவர் நடிகராக இருக்கலாம், அவருக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அப்பா, தாத்தா பெயரை வைத்து இந்த தொகுதியில் ஜெயித்து விட முடியும் என அவர் நினைத்து விட கூடாது.

என்னை நடிகையாக பார்க்காதீர்கள், உங்களின் ஒருவராக பாருங்கள், ஜாதி, மதங்களை கடந்து பழகுங்கள். கோட்டையை கைப்பற்றுவது நமது நோக்கம். அதற்கு முன்னர் இந்த தொகுதியை நாம் கைப்பற்ற வேண்டும். எந்தெந்த தொகுதியில் பாஜக வெற்றி பெறமுடியாது என்று கூறினார்களோ அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. தாமரை மலராது என்று நான் தான் சொன்னேன்; தற்போது நானே சொல்கிறேன் கட்டாயம் தாமரை மலர்ந்தே தீரும்” எனக் கூறினார்.

உதயநிதியை எதிர்த்து போட்டியிடுவீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் என்னை எதிர்த்து அவர் போட்டியிட தயாரா? என சொல்லவேண்டும், உதயநிதி ஸ்டாலின் என்ன…. ஸ்டாலினை எதிர்த்தே அவர் போட்டியிடும் அதே தொகுதியில் போட்டியிடுவேன் என பதிலளித்தார்.