ஜெயலலிதாவாக தன்னை சித்தரித்துக் கொண்ட குஷ்பு!

 

ஜெயலலிதாவாக தன்னை சித்தரித்துக் கொண்ட குஷ்பு!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். அதே தொகுதியில் திமுக சார்பில் எழிலனும் போட்டியிடுகின்றனர். இதனால் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயலலிதாவாக தன்னை சித்தரித்துக் கொண்ட குஷ்பு!

இந்நிலையில் பிரச்சாரத்தின்போது பேசிய குஷ்பு, “துணி துவைப்பது எவ்வளவு கஷ்டம் என்று பெண்களை கேட்டுப் பாருங்கள், அதனால்தான் அதிமுக துணி துவைக்க வாஷிங் மெஷின் கொடுக்கின்றனர். அதன்பின்னர் பெண்களால் நிம்மதியாக துணி துவைக்கமுடியும். அந்த நிம்மதியையே நாங்கள் தர விரும்புகிறோம். இந்த ஆணாதிக்க உலகில் என்னை நீங்கள் ஜெயிக்க வைத்தால், அது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தைரியத்தைக் கொடுக்கும்.

நான் வெற்றிப்பெற்றால் உங்கள் சகோதரியாக இருப்பேன். ஆயிரம் விளக்கு தொகுதி, ஆயிரம் விளக்குகளைப் போன்று ஜொலிக்க நீங்கள் எனக்கு வாக்களியுங்கள். செய்வீர்களா? என மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா கேட்பதைப் போல கேட்கிறேன். மக்களாகிய உங்களுக்காக நான் இருக்கிறேன், ஜெயலலிதா இருக்கிறார். என்னை சட்டசபைக்கு நீங்கள் அனுப்புவீர்களா?” என பேசினார்.