குன்றத்தூர் அபிராமியின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை

 

குன்றத்தூர் அபிராமியின் சகோதரர்  தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற கொடூர தாய் குன்றத்தூர் அபிராமியின் வழக்கு அவரது குடும்பத்தையும் துரத்துகிறது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அபிராமியின் சகோதரர் பிரசன்ன மணிகண்டன். உருகி உருகி காதலித்த பெண் கைகூடி வரும் நேரத்தில் பெண் வீட்டாருக்கு அமிராமியின் கொடூர செயல் தெரியவர, திருமணத்திற்கு தடை போட்டுவிட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

குன்றத்தூர் அபிராமியின் சகோதரர்  தூக்கிட்டு தற்கொலை

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கி எடுத்தது அந்த இரட்டைக் கொலை. சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வருபவர் விஜய்(30). இவரது மனைவி அபிராமி(25). இத்தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய்க்கு ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் பணி. பெரும்பாலும் இவருக்கு இரவுப்பணி. வீட்டிற்கு பெரும்பாலும் வராமல் கூட வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இதனால் அபிராமிக்கு அதிக சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு அவர் டிக் டாக் செயலி மூலம் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி அதை பதிவேற்றி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் குன்றத்தூர் பிரியாணி கடையில் அடிக்கடி பிரியாணி ஆர்டன் செய்து சாப்பிட்டு வந்திருக்கிறார். அப்போது பிரியாணி டெலிவரி செய்த சுந்தரம் என்பவர் அபிராமிக்கு கூடுதலாக பிரியாணி கொடுத்திருக்கிறார். இதில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ள உறவாக தொடர்ந்திருக்கிறது. இருவரும் அபிராமி வீட்டிலேயே அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

குன்றத்தூர் அபிராமியின் சகோதரர்  தூக்கிட்டு தற்கொலை

இரு வீட்டாருக்கும் இது தெரிந்ததால் இருவரையும் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அபிராமி அதைக் கேட்கவில்லை. சுந்தரத்துடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார். கணவருக்கு இந்த விவரம் எல்லாம் தெரிந்தும் அவர் கண்டித்ததால் வெறுப்பில் இருந்திருக்கிறார் அபிராமி. இருவீட்டாரும் மீண்டும் உட்கார்ந்து பேசி கணவனும் குழந்தைகளும் தான் முக்கியம் டிக் டாக் செயலியில் ஆடிப் பாடுவது எல்லாம் விட்டுவிடு. கள்ளக்காதலனை விட்டு குடும்பத்தை கவனி என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள் . ஆனால் கணவனும் குழந்தைகளும் தேவையில்லை கள்ளக்காதலனும் அந்த உல்லாச வாழ்க்கையும்தான் அவசியம் என்று நினைத்த அபிராமி காதலனிடம் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். கணவனையும் குழந்தைகளையும் கொலை செய்து விட்டால் நாம் எந்த தடையும் இல்லாமல் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

குன்றத்தூர் அபிராமியின் சகோதரர்  தூக்கிட்டு தற்கொலை

இதை அடுத்து அவர் சொன்ன ஆலோசனையின்பேரில் கணவன் குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். இதில் கணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்ப குழந்தைகள் இருவரும் பலியாகிவிட்டனர் . பின்னர் காதலனுடன் கேரளாவிற்கு சென்று அங்கே புரோட்டா கடை நடத்தி கொண்டு அங்கேயே உல்லாச வாழ்க்கை வாழலாம் என்று நினைத்து சென்னை கோயம்பேட்டிலிருந்து தப்பித்து நாகர்கோயில் சென்றவர் நாகர்கோயில் பேருந்து நிலையத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

குன்றத்தூர் அபிராமியின் சகோதரர்  தூக்கிட்டு தற்கொலை

இந்த குன்றத்தூர் அபிராமியின் வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அபிராமியும் காதலன் மீனாட்சி சுந்தரமும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ஒரு சாட்சியின் மீது விசாரணையும் வழக்கின் மீதான வாதமும் நடைபெற இருப்பதால் இந்த வழக்கு நிறைவு பெறும் தருவாயில் இருக்கிறது. வழக்கின் மீதான புகார்கள் அனைத்தும் உறுதியாகி விட்டதால் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், அபிராமியின் சகோதரர் பிரசன்ன மணிகண்டன்(27) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

குன்றத்தூர் அபிராமியின் சகோதரர்  தூக்கிட்டு தற்கொலை

அபிராமியின் குடும்பத்தினர் மாங்காடு அடுத்த பணிச்சேரியில் வசித்து வருகின்றனர். சென்னை பெரம்பூரில் வசித்து வரும் வேலூரை சேர்ந்த பெண்ணை பிரசன்னமணிகண்டன் காதலித்து வந்திருக்கிறார். இரு வீட்டாருக்கும் இது தெரிந்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் அபிராமியின் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்திருக்கிறது.

இதில் மிரண்டு போன பெண் வீட்டாரும் பெண்ணும் பிரச்சன்ன மணிகண்டனின் சகவாசமே இனி வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.

குன்றத்தூர் அபிராமியின் சகோதரர்  தூக்கிட்டு தற்கொலை

திருமணம் வரைக்கும் வந்த தனது காதல் இப்படி நின்று போய்விட்டதே என்று மன உளைச்சலில் இருந்திருக்கிறார் மணிகண்டன். வெள்ளிக்கிழமை மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மணிகண்டன், அன்று இரவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

பிரசன்ன மணிகண்டனின் தற்கொலை குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.