மன அழுத்தத்தால் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

 

மன அழுத்தத்தால் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

நெல்லை மாவட்டத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு போர்மேனாக கேரளாவை சேர்ந்த பைஜூப் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பைஜூப் தனது வீட்டின் வெளியே உள்ள கார்பார்க்கிங்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மன அழுத்தத்தால் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது வீட்டில் நடத்திய பரிசோதனையில் பைஜூப் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், தான் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதாக பைஜூப் எழுதியிருக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் அதனை பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கல்பாக்கம் அணுமின் நிலைய ஆராய்ச்சி பயிற்சி மாணவி ஜுனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது பைஜூப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.