ஊழல் புகாரை அமைச்சரால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியல- கே.எஸ் அழகிரி

 

ஊழல் புகாரை அமைச்சரால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியல- கே.எஸ் அழகிரி

பெகசிஸ் விவகாரம் தொடர்பாக பேசமால் இருக்கவே மாஸ்கை கழட்டாமல் பிரதமர் மோடி இருந்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஊழல் புகாரை அமைச்சரால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியல- கே.எஸ் அழகிரி

ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அந்த கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, “அதிமுக அமைச்சர் மீதான ஊழல் புகார் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை இல்லை. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்கள் மீது சுமத்தப்படும் ஊழல் புகாரை ஆதாரப்பூர்வமாக இல்லை என்று நிருபிக்க வேண்டும். ஆனால் அமைச்சர்களால் அதை செய்ய முடியவில்லை. அவர்களை பழிவாங்க சொந்த பகை ஏதும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.

கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளவே மாஸ்க் அணிய சொன்னோம். ஆனால் பெகசிஸ் விவகாரம் தொடர்பாக மோடி பதில் பேசாமல் இருக்க மாஸ்கை கழட்டாமல் அமைதி காக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக மோடி பதவி விலக வேண்டும்” என தெரிவித்தார்.