கமலின் கட்சி தேர்தலுக்கு பின் காணாமல் போய்டும்- கேபி முனுசாமி

 

கமலின் கட்சி தேர்தலுக்கு பின் காணாமல் போய்டும்- கேபி முனுசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் மற்றும் கால்நடை பன்முக மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “ரஜினியும், கமலும் நேற்று சந்தித்துள்ளனர். இருவரும் நடிகர்கள், நீண்டகால நண்பர்கள் என்பதால் சந்திப்பு நிகழ்ந்தது சகஜமே. ரஜினி தன்னால் அரசியல் கட்சி தொடங்க முடியாத சூழலில் உள்ளேன் என கூறிவிட்டார். ஆனால் ரஜினியை சந்தித்து என்ன பேசினார் என்பதை கமல்ஹாசன் தான் தெரிவிக்கவேண்டும், ஆனால் கமல்ஹாசன் கட்சி தொடங்கி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

கமலின் கட்சி தேர்தலுக்கு பின் காணாமல் போய்டும்- கேபி முனுசாமி

மாற்றமும் ஏற்படாது. 60 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து விட்டு மக்களை காப்பாற்றுவேன் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் நாங்கள் 60 ஆண்டுகளாகவே மக்கள் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். நடிகர்களின் கட்சிகள் திடீரென வரும், தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய்விடும்” எனக் கூறினார்.