ஸ்டாலினின் தந்தை விஞ்ஞான பூர்வமான ஊழலை செய்துள்ளார் என கமிஷனே கூறி உள்ளது- கேபி முனுசாமி

 

ஸ்டாலினின் தந்தை விஞ்ஞான பூர்வமான ஊழலை செய்துள்ளார் என கமிஷனே கூறி உள்ளது- கேபி முனுசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் மற்றும் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்பியுமான கேபி. முனுசாமி பங்கேற்று நிர்வாகிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

ஸ்டாலினின் தந்தை விஞ்ஞான பூர்வமான ஊழலை செய்துள்ளார் என கமிஷனே கூறி உள்ளது- கேபி முனுசாமி

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி, “ஸ்டாலின் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென கடுமையாக முயற்சித்து வருகிறார். அவருக்கு எது எடுத்தாலும் தோல்வி கிடைத்துக்கொண்டே வருகிறது. கடைசி ஆயுதமாக இதை கையில் எடுத்துள்ளார். அவர் தந்தை விஞ்ஞான பூர்வமாக உழலை செய்தார் என்று ஒரு கமிஷனே கூறி உள்ளது. அந்த குடும்பத்தில் இருந்த வந்தவரும் ஊழலுக்கு சொந்தக்காரர் என அனைவருக்கும் தெரியும். அரசின் மீது குற்றம் சாட்ட முடியாமல் இதுபோன்று செய்து வருகிறார். அதிமுக எந்த நேரத்திலும் சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறது” எனக் கூறினார்.