சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

+

தூத்துக்குடி

கோவில்பட்டியில் 17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திட்டங்குளம் சண்முகா நரை சேர்ந்த இருளாண்டி என்பரது மகன் பாண்டியராஜ்(23). இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோயில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த சிறுமி மற்றும் பாண்டியராஜை ரகசிய தகவலின் பேரில் மீட்ட போலீசார், பாண்டியராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.