“விமானத்துல வந்தாலும் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்றானுங்களே” -கேரளா பெண்ணுக்கு விமானத்தில் வன்கொடுமை.

 

“விமானத்துல வந்தாலும் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்றானுங்களே” -கேரளா பெண்ணுக்கு விமானத்தில் வன்கொடுமை.


ஒரு விமானத்தில் பயணம் செய்த ஒரு கேரளா பெண்ணை, அந்த விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறினார்.

“விமானத்துல வந்தாலும் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்றானுங்களே” -கேரளா பெண்ணுக்கு விமானத்தில் வன்கொடுமை.


கடந்த திங்கள் கிழமையன்று கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு இளம் பெண் விஸ்டாரா விமானத்தில் (யுகே 885) டெல்லியில் இருந்து கேரளாவின் கொச்சிக்குச் சென்று கொண்டிருந்தார் .அப்போது பின் இருக்கையிலிருந்து ஒரு ஆண் பயணி முன் சீட்டிலிருந்த அந்த பெண்ணிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து கொண்டிருந்தார் .அந்த நபர் முன் சீட்டு பெண்ணை தனது கைகளை விட்டு தடவிக்கொண்டிருஅந்தார் .அப்போது அந்த பெண் இது ஏதோ தற்செயலாக நடந்தது என்று நினைத்தார் .ஆனால் அந்த நபர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் சேட்டையில் ஈடுபட்டார் .அதனால் அந்த பெண் தனது இருக்கையை சற்றே சாய்த்து விட்டு உட்கார்ந்தார் .அப்போது அந்த நபர் மீண்டும் இப்படி சேட்டையில் ஈடுபட்டார் .
அதனால் அந்த நபரை கையும் களவுமாக பிடிக்க தனது செல்போன் கேமெராவில் படம் பிடித்தார் .அதன் பிறகு அந்த விமான பணிப்பெண்ணிடம் அந்த வீடியோவை காமித்து அந்த நபரின் சேட்டைகளை புகாளித்தார் .அதன் பிறகு அந்த விமானத்திலிருந்த அதிகாரிகள் விமானம் தரையிறங்கியதும் அவரிடம் விசாரணை நடத்தினார்கள் .அப்போது அந்த நபர் தனது செய்கைக்கு மன்னிப்பு கோரினார் .அப்போது அவர் தனக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இருப்பதாகவும் இந்த செயலுக்கு மிகவும் வருந்துவதாகவும் கூறினார் .ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தான் இந்த செயலை சட்டபூர்வமாக அணுக உள்ளதாக கூறினார் .இந்த பாலியல் கொடுமை பற்றி பேசிய விமான நிறுவன அதிகாரிகள் தாங்கள் இது போன்ற செயலை கண்டிப்பதாகவும் ,பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு உதவிகரமாக இருப்போமென்று கூறினர் .

“விமானத்துல வந்தாலும் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்றானுங்களே” -கேரளா பெண்ணுக்கு விமானத்தில் வன்கொடுமை.