நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து… ஒருவர் கைது!

 

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து… ஒருவர் கைது!

சென்னை பெருங்குடி, திருமலை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். அதே பகுதியில் வசிக்கும் கோபி மற்றும் அருண் ஆகியோர் மணிகண்டனின் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மணிகண்டன், கோபி மற்றும் அருண் உடன் பெருங்குடி, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் பின்பக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மணிகண்டனுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து… ஒருவர் கைது!

சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் மணிகண்டனை கோபியும் அருணும் தாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனை குத்திவிட்டு அவர் அணிந்திருந்த செயின் மற்றும் அவரது யமஹா பைக், செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர், குற்றவாளி அருணை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள குற்றவாளி கோபியை தேடி வருகின்றனர்.