கள்ளக்குறிச்சியில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.6.80 கோடி வசூல்; 7 பேர் கைது!

 

கள்ளக்குறிச்சியில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.6.80 கோடி வசூல்; 7 பேர் கைது!

கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.6.80 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விதமாக தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இந்த திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், அதிகாரிகள் மோசடி நடந்ததாக புகார் எழுந்த எல்லா மாவட்டங்களிலும் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.6.80 கோடி வசூல்; 7 பேர் கைது!

அந்த ஆய்வில், விவசாயிகள் அல்லாதோருக்கு இத்திட்டத்தில் பணம் கொடுக்கப்பட்டது அம்பலமானதாக கூறப்படுகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திரும்ப பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததன் படி, பணம் திருப்பி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.6.80 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்களாம்.