கிசான் முறைகேடு : 2 பெண் அதிகாரிகள் கைது!

 

கிசான் முறைகேடு : 2 பெண் அதிகாரிகள் கைது!

கிசான் முறைகேடு தொடர்பாக விழுப்புரத்தில் 2 பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் விவசாயி அல்லாதோரும் நிதியுதவி பெற்றிருப்பது ஆய்வில் அம்பலமானது.

கிசான் முறைகேடு : 2 பெண் அதிகாரிகள் கைது!

இதனால் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் சென்றது. இதை தொடர்ந்து முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து மீண்டும் அந்த தொகையானது திரும்ப பெறப்பட்டு வருகிறது. இப்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம் என பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான பணம் மீண்டும் அரசு கணக்கில் வைப்பு வைக்கப்பட்டு வருகிறது.

கிசான் முறைகேடு : 2 பெண் அதிகாரிகள் கைது!

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சி ஒன்றிய வேளாண் உதவி அலுவலர் ஆயிஷா, சாவித்திரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் முறைகேடு திட்டத்தில் இதுவரை 8 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.