இரவு முழுவதும் பப்ஜி ஆடிய மாணவன் காலையில் தற்கொலை ! ராணுவ வீரரின் மகனின் விபரீத செயல் !!

 

இரவு முழுவதும் பப்ஜி ஆடிய மாணவன் காலையில் தற்கொலை ! ராணுவ வீரரின் மகனின் விபரீத செயல் !!

கொல்கத்தாவில் தனது தாய் மற்றும் சகோதரனுடன் காந்தி காலனியில் சிறுவன் வசித்து வந்தான், அவனது தந்தை, தமிழகத்தைச் சேர்ந்தவரும், ராணுவ வீரருமான, தற்போது அருணாச்சல பிரதேசத்தில் பணிபுரிந்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் PUBG விளையாடிவிட்டு 14 வயது சிறுவன் சனிக்கிழமை அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

9 ஆம் வகுப்பு மாணவரும், ராணுவ வீரரின் மகனுமான சிறுவன் சனிக்கிழமை அதிகாலை தனது படுக்கையறையில் வென்டிலேட்டரின் கிரில்லில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக ரயில்வே காலனி காவல் நிலைய பொறுப்பாளர் ஹன்ஸ்ராஜ் மீனா தெரிவித்தார்.

 

இரவு முழுவதும் பப்ஜி ஆடிய மாணவன் காலையில் தற்கொலை ! ராணுவ வீரரின் மகனின் விபரீத செயல் !!

சிறுவனின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, சிறுவன் தனது தாயின் மொபைல் தொலைபேசியில் கேமிங் புரோகிராமை மூன்று நாட்களுக்கு முன்புதான் பதிவிறக்கம் செய்திருந்தான், ஆனால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து விளையாடி வந்துள்ளான்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை விளையாடியதாக உறவினர் தெரிவித்தனர். அதன்பிறகு தூங்குவதற்கு சென்றான். ஆனால் காலையில் வென்டிலேட்டரின் கிரில்லில் தொங்கிய நிலையில் அவனது உடல் காணப்பட்டது. இதையடுத்து சிறுவன் எம்.பி.எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் “இறந்துவிட்டார்” என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.