சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆல்ரவுண்டர் வீரர் விலகல்

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆல்ரவுண்டர் வீரர் விலகல்

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் எனப் பலராலும் கணிக்கப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், நடந்து முடிந்த 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று 6 புள்ளிகளோடு 8-ம் இடத்தில் உள்ளது சென்னை. எட்டாம் இடத்தில் உள்ள ராஜஸ்தானும் 6 புள்ளிகள்தான். ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் சற்று முந்தைய இடத்தில் உள்ளது சென்னை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆல்ரவுண்டர் வீரர் விலகல்

சென்னை அணியிலிருந்து ஆல்ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியபோது பந்து வீசிய பிராவோ காயம் அடைந்தார். அதனால்தான் போட்டியின் இடையில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அப்போட்டி முடியும் வரை அவர் திரும்ப வில்லை. அதனால்தான் இறுதி ஓவரை ஜடேஜா வீச டெல்லி எளிதாக வென்றது. ஒருவேளை பிராவோ கடைசி ஓவரை வீசியிருந்தால் சென்னை வென்றிருக்க வாய்ப்பிருந்தது அல்லது டெல்லிக்கு கடும் நெருக்கடியையாவது கொடுத்திருப்பார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆல்ரவுண்டர் வீரர் விலகல்

பஞ்சாப் அணியோடு சென்னை மோதிய போட்டியில் பிராவோ ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் லெவன் அணியில் இடம்பெற வில்லை. காரணம் காயம் என்று கூறப்பட்டது. ஆனால், அது இந்த ஐபிஎல் சீசன் முழுக்க அவர் ஆடமுடியாத அளவுக்கு பிராவோவை முடக்கி விட்டது.