கம்பம் அருகே விஷப்பாம்பு தீண்டியதில் கேரள இளைஞர் பலி!

 

கம்பம் அருகே விஷப்பாம்பு தீண்டியதில் கேரள இளைஞர் பலி!

தேனி

கம்பம் அருகே விஷப்பாம்பு கடித்ததில் சுற்றுலா வந்த கேரள இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் டோனிபாபு (25). இவர் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக கடந்த 16ஆம் தேதி வந்துள்ளார். இந்த நிலையில், கம்பம் மணிக்கட்டி பகுதியில் உள்ள திராட்சை தோட்டத்தை பார்வையிட சென்றுள்ளார்.

கம்பம் அருகே விஷப்பாம்பு தீண்டியதில் கேரள இளைஞர் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக தரையில் படுத்திருந்த விஷப்பாம்பை மிதித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவரை விஷம்பாம்பு தீண்டியத. இதனை அடுத்து, அருவில் இருந்தவர்கள் டோனிபாபுவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.