தனியார் விடுதியில் கேரள இளைஞர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

 

தனியார் விடுதியில் கேரள இளைஞர் தூக்கிட்டு தற்கொலை  – போலீசார் விசாரணை!

திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே, தனியார் விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் விடுதியில் கேரள இளைஞர் தூக்கிட்டு தற்கொலை  – போலீசார் விசாரணை!

கேரளாவை சேர்ந்த பைஜீ( 44 ) என்பவர் , கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த விடுதியில் வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் அறை இன்று காலை முதல் நீண்ட நேரமாக திறக்காமல்
இருந்துள்ளது. இதை கவனித்த விடுதி ஊழியர்கள், உடனடியாக கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் வந்து,அறைக்கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது பைஜீ தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தனியார் விடுதியில் கேரள இளைஞர் தூக்கிட்டு தற்கொலை  – போலீசார் விசாரணை!

இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.