உடுமலை அருகே கேரள காதல் ஜோடி தற்கொலை முயற்சி… இளைஞர் பலியான சோகம்!

 

உடுமலை அருகே கேரள காதல் ஜோடி தற்கொலை முயற்சி… இளைஞர் பலியான சோகம்!

திருப்பூர்

உடுமலை அருகே கேரளாவை சேர்ந்த காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில், இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக – கேரள எல்லையான காந்தளூர் வனப்பகுதியில் பெண் ஒருவர் கைகளை அறுத்துக்கொண்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மேலும், அருகில் பாறையின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரும் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கேரள மாநிலம் மறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடுமலை அருகே கேரள காதல் ஜோடி தற்கொலை முயற்சி… இளைஞர் பலியான சோகம்!

மேலும், தற்கொலை செய்துகொண்ட ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த இளைஞர் இடுக்கி மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்த நாதர்ஷா என்பதும், தற்கொலைக்கு முயன்ற பெண் மறையூரை சேர்ந்த ஆசிரியை நிகிலா என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், அதற்கு நாதர்ஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த காதலர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து காந்தளூர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். முதலில் நிகிலா கைகளை அறுத்துக்கொண்டு மயங்கிய நிலையில், அவர் உயிரிழந்ததாக கருதி நாதர்ஷா பாறையின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.