தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

 

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது.

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது. தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர்மல்க பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், அந்த ஆடியோவில், எனக்கும் அந்தப் பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறியிருந்தார். இதை தொடர்ந்து ஸ்வப்னாவை தேடி வந்த கேரள காவல்துறையினர், நேற்று பெங்களூருவில் வைத்து அவரையும், அவரின் நண்பர் சந்தீப் நந்தீரையும்  கைது செய்தனர்.

இந்நிலையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சியில் உள்ள என். ஐ. ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்வப்னா சுரேஷ்க்கு, சந்தீப் நாயருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.