ஓடும் ரயிலில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை… கேரள ராணுவ வீரர் கைது…

 

ஓடும் ரயிலில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை… கேரள ராணுவ வீரர் கைது…

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் ஓடும் ரயிலில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற கேரள ராணுவ வீரரை, ரயில்வே போலீசார் கைதுசெய்தனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லும் மங்களூரு விரைவு ரயில் பயணம்செய்தார். அவர் பயணித்த பெட்டியில் கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்த ராணுவ வீரர் பய்ஞ்சு குட்டம்மாள்(32) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

ஓடும் ரயிலில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை… கேரள ராணுவ வீரர் கைது…

இந்த நிலையில் அதிகாலை 2 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே ரயில்சென்ற போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மாணவிக்கு, ராணுவ வீரர் பாலியல் தொல்லை அளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி திடுக்கிட்டு கூச்சலிட்டார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து மாணவியை மீட்டனர். தொடர்ந்து, ராணுவ வீரரை மடக்கிப்பிடித்து காட்பாடி ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடம் ஜோலார்பேட்டை எல்லைக்கு உட்பட்டதால் அவர்கள் ராணுவ வீரரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு ராணுவ வீரர் பய்ஞ்சு குட்டம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவரை திருப்பத்தூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.