கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு!

 

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு!

கீழடியில் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. தொன்மையான இந்த பொருட்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்23 ஆம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளன

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு!

தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில் கொந்தகை ஈமக்காட்டுப்பகுதியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு அருகில் உள்ள விவசாய விளைநிலத்தில் மனித எலும்புக்கூடு தற்போது கண்டறியப்பட்டுள்ளது கதிரேசன் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் விவசாய பணிகளுக்காக குழி தோண்டும்போது மனித எலும்புக்கூடு இருந்ததை கண்டு தொல்லியல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனித எலும்புக் கூட்டினை தொல்லியல் துறையினர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணுவில் துறை பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்