பண தகராறில் ஒருவர் படுகொலை – தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை

 

பண தகராறில் ஒருவர் படுகொலை – தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை

கரூர்.

கரூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிகொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலை வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தனராஜ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பண தகராறில் ஒருவர் படுகொலை – தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை

இந்நிலையில் தனராஜ் இன்று தனது நண்பர் பூபதி என்பவருடன் தெருவில் நின்று பேசிகொண்டு இருந்துள்ளார். அப்போது சென்ற மோகன்ராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த தனராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பூபதியை, அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மோகன்ராஜை தேடி வருகின்றனர்.