கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் முன் ஜாமீன் கோரி மனு!

 

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் முன் ஜாமீன் கோரி மனு!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் என்பவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முருக கடவுளின் பெருமைகளை போற்றி, உடல் உறுப்புகளை காக்க வேண்டுமென பாடப்பட்ட கந்த சஷ்டி கவசத்திற்கு, ஆபாச வார்த்தைகளால் விளக்கமளித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டது. இது தொடர்பாக தமிழக பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கறுப்பர் கூட்டதை சேர்ந்த செந்தில் வாசன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் மற்றும் வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டும், வீடியோவில் பேசியிருந்த நாத்திகன் என்ற சுரேந்திரன் தானாக சரணடைந்ததையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் முன் ஜாமீன் கோரி மனு!

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் என்பவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட விடியோ பதிவிற்கு, 200 நாட்கள் கழித்து உள் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளாதாகவும், வீடியோக்கள் நிக்கப்பட்டு மன்னிப்பு கோரிய பிறகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தன்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.