கந்த சஷ்டி விவகாரம்; கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் காவல்நிலையத்தில் சரண்!

 

கந்த சஷ்டி விவகாரம்; கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் காவல்நிலையத்தில் சரண்!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

கந்த சஷ்டி விவகாரம்; கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் காவல்நிலையத்தில் சரண்!

இதனால் கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனிடையே கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அவரது மனு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கந்த சஷ்டி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர் சரண் அடைந்திருக்கிறார். அதனால், சுரேந்திரனை தமிழகம் அழைத்து வர போலீசார் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.