திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின், தேவஸ்தான நிர்வாக அலுவலக மைதானத்தில் இன்று கார்த்திகை உற்சவம் நடைபெறவிருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஜீயர்கள், அச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இணைந்து கோவில் முழுவதுமாக 1000 நெய் தீபங்களை ஏற்றினர். இதை தொடர்ந்து பூஜை நடத்தப்பட்டு, மண்பானை விளக்கை அர்ச்சகர்கள் தெப்பக்குளத்தில் விட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா!

இந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கார்த்திகை உற்சவம் நடைபெறுகிறது. கார்த்திகை சோமவாரம் மற்றும் பவுர்ணமியை ஒட்டி நடத்தப்படும் இந்த விழாவில், 500 பெண்கள் இணைந்து தீபங்களை ஏற்றவிருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு, பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சொற்பொழிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீப திருவிழா நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகின்றன.