பாட்டி இறந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்! கலங்கும் நடிகர் கார்த்தி
May 7, 2021, 04:57 IST1620343620000
அமீர் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார் (அறிமுகம்), பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து, கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பருத்திவீரன். இந்தத் படத்தில் புதுமுக கதாநாயகனாக சிவகுமாரின் மகன் கார்த்தி நடித்தார். இந்த படத்தில் நடித்திருந்த பஞ்சவர்ண பாட்டி இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது பேஸ்புக் பக்கத்தில், “பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.