பிள்ளைகள் படிக்க தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய தாய்

 

பிள்ளைகள் படிக்க தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய தாய்

பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தான் அணிந்திருந்த தாலியை அடகு வைத்து டிவி வாங்கித்தந்துள்ளார் ஒரு தாய்.

கர்நாடக மாநிலத்தின் கடக் என்ற ஊரில் இந்த நெகிழ வைக்கும் நிகழ்வு நடந்துள்ளது. கர்நாடகாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பிள்ளைகள் படிக்க தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய தாய்

இந்நிலையில் கடக் மாவட்டத்தில் வசிக்கும் கஸ்தூரி என்ற பெண் தன் பிள்ளைகள் படிப்பதற்காக தாலியை அடகு வைத்து டிவி வாங்கித் தந்துள்ளார். தினமும் அண்டை வீட்டுக்கு டிவி பார்த்து கல்வி கற்க பிள்ளைகளை அனுப்ப மனம் விரும்பவில்லை என்றும் எனவே இந்த முடிவுக்கு வந்ததாகவும் கஸ்தூரி கூறினார்