வாடகை காரை ‘ஆட்டையை போட்ட’ இளைஞர் : கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

 

வாடகை காரை ‘ஆட்டையை போட்ட’ இளைஞர் : கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

கர்நாடகாவில் வாடகை காரை திருடிச் சென்ற நபரை போலீசார், வலைவீசி தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிந்தாமணி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது காரை கடந்த 4ம் தேதி எர்ரமந்தல பகுதியை சேர்ந்த கணேஷ் (27) என்ற இளைஞர் ஒரு நாளைக்கு ரூ.6,500க்கு வாடகைக்கு எடுத்துள்ளார். வேலூர் செல்ல வேண்டும் என கூறிய கணேஷுடன் டிரைவர் மூர்த்தியையும் அனுப்பி வைத்துள்ளார் மகேஷ்.

வாடகை காரை ‘ஆட்டையை போட்ட’ இளைஞர் : கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

இந்த நிலையில், வேலூருக்கு சென்று கார் மீண்டும் சிந்தாமணிக்கு குடிபாலா பகுதி வழியாக திரும்பிக் கொண்டிருந்துள்ளது. வழியில் திடீரென காரை நிறுத்தச் சொல்லிய கணேஷ் ஒரு தெருவை கை காட்டி, அங்கு தனது உறவினரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வருமாறு மூர்த்தியிடம் கூயிருக்கிறார். அதனை கேட்டு மூர்த்தி அந்த தெருவுக்குள் செல்ல, சைக்கிள் கேப்பில் கணேஷ் அந்த காரை ஆட்டையை போட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

வாடகை காரை ‘ஆட்டையை போட்ட’ இளைஞர் : கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

திரும்ப வந்து பார்க்கும் போது கார் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி, அப்பகுதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கணேஷை தேடி வந்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.