கர்ணன் ரிலீஸ்… தாணு போட்ட ட்வீட்டால் துள்ளி குதிக்கும் உற்சாகம்!

 

கர்ணன் ரிலீஸ்… தாணு போட்ட ட்வீட்டால் துள்ளி குதிக்கும் உற்சாகம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாஸாக உருவாகி இருக்கும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தின் கண்டா வரச் சொல்லுங்க, பண்டராத்தி புராணம் உள்ளிட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளன. படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவுக்கு இருந்தது அந்த பாடல்கள். இந்த சூழலில் தான், ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் ரிலீஸ் ஆகுமென படக்குழு அறிவித்தது.

கர்ணன் ரிலீஸ்… தாணு போட்ட ட்வீட்டால் துள்ளி குதிக்கும் உற்சாகம்!

ஒரு மாதத்துக்கு முன்பே ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், புக்கிங் ஓபன் ஆனதும் ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர். சென்னையின் பல தியேட்டர்களில் 3 நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் பொருட்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு தியேட்டர்களில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கர்ணன் ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

கர்ணன் ரிலீஸ்… தாணு போட்ட ட்வீட்டால் துள்ளி குதிக்கும் உற்சாகம்!

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, திட்டமிட்டப்படி கர்ணன் நாளை ரிலீஸ் ஆகும். அரசின் அறிவுத்தலின் பேரில் முறையான தடுப்பு நடவடிக்கைகள் தியேட்டர்களில் பின்பற்றப்படும். கர்ணனுக்கு உங்களது ஆதரவை கொடுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். கர்ணன் வெல்வான் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாணுவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.