குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

 

குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்14-வது வார்டு பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு
வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுபபாடு காரணமாக அவதிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் இன்று குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து, காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களின்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.