“வந்துவிடு விஜய் அரசியலுக்கு வந்துவிடு” -வசந்தகுமார் மகனை வரச்சொல்லும் அடிகளார்

 

“வந்துவிடு விஜய் அரசியலுக்கு வந்துவிடு” -வசந்தகுமார் மகனை வரச்சொல்லும் அடிகளார்

சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரால் விரைவில் அந்த தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் அவரின் மகன் விஜய் வசந்த்
போட்டியிட சமயத்தலைவர் அய்யாவழி பலாபிரஜாபதி அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்

“வந்துவிடு விஜய் அரசியலுக்கு வந்துவிடு” -வசந்தகுமார் மகனை வரச்சொல்லும் அடிகளார்


பிரபல சமய தலைவரான அய்யாவழி பலாபிரஜாபதி அடிகளார் வசந்தகுமாரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் .அவரின் பேச்சை வசந்தகுமார் மீறமாட்டாரென்றும் ,பல விஷயங்களில் அவருக்கு இவர் ஆலோசனை கொடுத்துள்ளாரென்றும் கூறப்படுகிறது .அது மட்டுமல்லாமல் வசந்தகுமார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது விஜய் வசந்த் அந்த தொகுதி முழுவதும் தன்னுடைய தந்தையோடு சேர்ந்து பம்பரமாய் சுழன்று பிரச்சாரம் செய்தவர் ,இதனாலும் அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பதாலும் அவர் மக்களிடையே நல்ல அறிமுகம் கொண்டவர் .இதனால் காங்கிரஸ் பாரம்பரியமான அந்த குடும்பத்திற்கு ,தனது சொந்த பணத்தை செலவு செய்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்த வசந்த குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்த கட்சி அவரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு தருமென்று அந்த தொகுதி வாசிகள் நம்புகிறார்கள்.

“வந்துவிடு விஜய் அரசியலுக்கு வந்துவிடு” -வசந்தகுமார் மகனை வரச்சொல்லும் அடிகளார்