கேரளாவுக்கு லாரியில் கடத்திச்சென்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Oct 22, 2020, 15:29 IST1603360788000
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக லாரியில் கேரளாவுக்கு கடத்திச்சென்ற 16 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை
மேற்கொண்டனர். அப்போது, லாரியில் 16 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மார்த்தாண்டம் பகுதியை ஓட்டுநர் விஜில் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், விஜிலை கைதுசெய்து விசாரித்து வருகினற்னர்.