மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்!

 

மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்!

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகன் மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அன்புநகரை கங்கைராஜன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோகன் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் ரூ. 30 ஆயிரம் கடனுக்காக அசலும், வட்டியுமாகச் செலுத்திய நிலையில் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்!

சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த இவர் கந்துவட்டி தொழிலையும் செய்து வந்ததாகத் தெரிகிறது. கந்துவட்டி புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக அழைத்த மோகன் தலைமறைவாகியுள்ளார்.

மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்!

கொரோனா பேரிடர் காலத்தில் மதுரை மேலடை பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் தனது மகளின் கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்கு உதவினார். இவரது சேவையை பலரும் பாராட்டிய நிலையில் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோகனுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.