திருமணத்தை மீறிய உறவு…பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த இளைஞர் ; கணவர் பரபரப்பு புகார்!

 

திருமணத்தை மீறிய உறவு…பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த இளைஞர் ; கணவர் பரபரப்பு புகார்!

கன்னியாகுமரி சகாய தெருவை சேர்ந்தவர் வசந்தன். இவரது மனைவி சிந்துஜா. சிந்துஜா வேறு ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில் அவரை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக அவரது கணவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு…பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த இளைஞர் ; கணவர் பரபரப்பு புகார்!

இதுகுறித்து வசந்தன் அளித்த புகாரில், தன் மனைவி சிந்துஜா கன்னியாகுமரியை சேர்ந்த மகேஷ் இளங்கோ என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்தார். தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட இந்த நட்பை பயன்படுத்தி சிறுகச்சிறுக சிந்துஜாவிடம் மகேஷ் இதுவரை 10 லட்சம் ரூபாயை பறித்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு…பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த இளைஞர் ; கணவர் பரபரப்பு புகார்!

பணத்தை திருப்பி கேட்ட போது அவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மகேஷ் இளங்கோ மிரட்டி வருகிறார். எனவே மகேஷ் இளங்கோவிடம் இருந்து பணத்தைப் பெற்றுத்தருமாறு அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு…பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த இளைஞர் ; கணவர் பரபரப்பு புகார்!

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் மகேஷ் இளங்கோவை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே கன்னியாகுமரியில் காசி என்ற இளைஞர் பல பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே போல் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.