போதை பொருட்கள் கடத்தலில் கங்கனா? சிவ சேனாவின் அடுத்த மூவ்!

 

போதை பொருட்கள் கடத்தலில் கங்கனா? சிவ சேனாவின் அடுத்த மூவ்!

நடிகை கங்கனா ரனாவத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.

பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து பேசிய நடிகை கங்கனா ரனாவத் மும்பை நகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருக்கிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர் மும்பைக்குள் வர கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

போதை பொருட்கள் கடத்தலில் கங்கனா? சிவ சேனாவின் அடுத்த மூவ்!

இதை தொடர்ந்து மும்பையில் கங்கனாவின் மணிகர்ணிகை அலுவலகம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி இடித்தது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருட்கள் கடத்தலில் கங்கனா? சிவ சேனாவின் அடுத்த மூவ்!

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை கங்கனா ரனாவத் கொண்டுவரப்பட்டுள்ளதாக என்று கூறியுள்ளார். தனது நண்பர் ஆத்யாயன் சுமன் போதை பொருட்கள் பயன்படுத்துவார். அவர் தன்னையும் போதை பொருட்கள் பயன்படுத்த வற்புறுத்தியதாக கங்கனா ஒரு பேட்டியில் கூறியதை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிகிறது.

போதை பொருட்கள் கடத்தலில் கங்கனா? சிவ சேனாவின் அடுத்த மூவ்!

இதுகுறித்து கூறியுள்ள கங்கனா , நான் போதை பொருட்கள் பயன்படுத்தினேனா என்று மருத்துவ சோதனை செய்யுங்கள். எனது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் மும்பையை விட்டே செல்ல தயார் என்று அதிரடியாக கூறியுள்ளார்.