மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளைஞர் கொலை; கணவர் சரண்

 

மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளைஞர் கொலை; கணவர் சரண்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த 19 வயது இளைஞரை, கணவர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்று, ஏரியில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(19). இவருக்கும், காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (43) என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளைஞர் கொலை; கணவர் சரண்

இதனை அறிந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள், இருவரையும் பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ் மீண்டும் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு செனறுள்ளார். அப்போது, ரவிச்சந்திரனுக்கும், தினேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் உருட்டுக் கட்டையால்

மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளைஞர் கொலை; கணவர் சரண்


தினேஷின் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, தினேஷின் உடலை காரை கிராமத்தின் அருகேயுள்ள மோட்டூர் ஏரியில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு குழி தோண்டி புதைத்த ரவிச்சந்திரன், இன்று காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதை தொடர்ந்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், ரவிச்சந்திரனை கைதுசெய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.