டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தினர்!

 

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தினர்!

விரும்பப்படாத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் புராரி மைதானத்தில் நடைபெற்று வரும் ‘டெல்லி சலோ’ போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 5 கட்டட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. இதனை தொடர்ந்து 6ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் 9ம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிடில் ஒரு வருடம் வரையில் கூட போராட்டத்தை தொடர தேவையான உணவு பொருட்களை வைத்திருக்கிறோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தினர்!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நமது ஆதரவினைத் தெரிவித்தனர்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.