என் நேர்மையை சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்- கமல்ஹாசன்

 

என் நேர்மையை சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அக்கட்சியில் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் அறிவித்தார். இதையடுத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மகேந்திரன் வெளியேறியதால் இனி கட்சிக்கு ஏறுமுகம் எனக்கூறி அறிக்கை விட்டார். கட்சியிலிருந்த சில நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை கமல்ஹாசன் கொடுத்திருந்தார்.

என் நேர்மையை சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்- கமல்ஹாசன்

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தன் பணியை நிறுத்தாது. முன்பை விட வேகமாக செயல்பட்டு மக்களின் ஆதரவை, ம.நீ.ம பெறும். எனக்கு சோதனைகளும், விமர்சனங்களும் புதிதல்ல. என் நேர்மையை சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன். கட்சி நிர்வாகிகள் யாரும் முன் அனுமதியின்றி நேரடியாகவோ, இணையவழியிலோ ஊடகத்தினரிடம் பேசக்கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.