வேலை கொடுக்கும் முதலாளியாக இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் மாற்றும்- கமல்ஹாசன்

 

வேலை கொடுக்கும் முதலாளியாக இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் மாற்றும்- கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசனும் தமிழகத்தில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பரப்புரையின்போது பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தமிழகத்தை சீரமைப்போம் என்ற குரலுடன் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளேன். கோடை வந்தால் குடி நீர் இல்லை என்பதை சீர் செய்ய வேண்டும். கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களை காக்க வேண்டும். சினிமா காரரை பார்க்க வந்த கூட்டம் ஓட்டு போட மாட்டார்கள் என்பவர்களுக்கு தமிழகத்தை மாற்ற வந்த கூட்டம் என்பதை இந்த கூட்டம் குரல் கொடுக்கிறது.

வேலை கொடுக்கும் முதலாளியாக இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் மாற்றும்- கமல்ஹாசன்

வேலை தேடும் தொழிலாளர்களாக இல்லாமல் வேலை கொடுக்கும் முதலாளிகளாக இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் மாற்றும். மக்கள் நீதி மய்யம் வறுமை, வறுமை கோட்டை பற்றி பேசவில்லை செழுமை கோட்டை பற்றி பேசுகிறது. இது வாக்குறுதி இல்லை நாங்கள் செய்ய வேண்டிய செயல் திட்டத்தின் பட்டியல். உங்களுக்கு செய்வது வரம் இல்லை, கொடுப்பவர்கள் தெய்வமும் இல்லை, அது நமது உரிமை” எனக் கூறினார்.