யார் பூனை, யாரு எலி என்பதை மத்திய பிரதேச மக்கள் முடிவு செய்வார்கள்…. கமல் நாத் ஆவேசம்

 

யார் பூனை, யாரு எலி என்பதை மத்திய பிரதேச மக்கள் முடிவு செய்வார்கள்…. கமல் நாத் ஆவேசம்

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத் தார் மாவட்டம் பத்னாவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் மகாராஜா இல்லை, நான் புலி இல்லை, நான் மாமா இல்லை, நான் ஒரு போதும் டீ விற்றது இல்லை. யார் புலி மற்றும் யார் இல்லை? யார் பூனை மற்றும் யார் எலி என்பதை மத்திய பிரதேச மக்கள் முடிவு செய்வார்கள்.

யார் பூனை, யாரு எலி என்பதை மத்திய பிரதேச மக்கள் முடிவு செய்வார்கள்…. கமல் நாத் ஆவேசம்

அரசாங்கம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். அவர்களின் 15 ஆண்டு ஊழல் நிலைப்பாடு அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அவர்கள் எனது அரசாங்கம் ஆட்சியில் இருந்த 15 மாதங்களை விசாரிக்க விரும்புகிறார்கள். எந்தவொரு விசாரணையையும் நான் வரவேற்கிறேன் என தெரிவித்தார். ஜோதிராதித்ய சிந்தியாவை மகாராஜா, புலி எனவும், சிவ்ராஜ் சிங் சவுகானை மாமா என்றும், நான் ஒரு போதும் டீ விற்றது இல்லை என பிரதமர் மோடியையும் மறைமுகமாக கமல்நாத் குறிப்பிட்டதாக தகவல்.

யார் பூனை, யாரு எலி என்பதை மத்திய பிரதேச மக்கள் முடிவு செய்வார்கள்…. கமல் நாத் ஆவேசம்

கமல்நாத்தின் கருத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உடனடியாக பதில் கொடுத்தார். இது தொடர்பாக சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு 1.5 ஆண்டு காலம் அவர் முதல்வராக இருந்த காலத்தில் மத்திய பிரதேசம் அழிக்கப்பட்டது. அவர் முழு மத்தியபிரதேசத்தையும் அழித்து விட்டார். அவர் என்ன செய்து இருந்தாலும் அதன் விளைவுகளை அரசு எதிர்க்கொள்கிறது. நாங்கள் அதை மக்கள் முன் கொண்டு வருவோம் என தெரிவித்தார்.